"பொங்கும் தமிழை பொலிவுறச் செய்வோம்; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்"
இந்த வாக்கினை நோக்காகக் கொண்டு நோர்வே வாழ் தமிழர்களின் குரலாய், தமிழின் குரலாய் எமது பணியாளர்களின் அயராத உழைப்பாலும், நேயர்களினதும், தாயகத்திலுள்ள எமது உறவுகளின் ஒத்துழைப்போடும் கடந்த 15 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது தமிழ் முரசம்.
எமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் காற்றலையில் எமது கடமை தொடர்கிறது.
தமிழ் முரசம் என்றும் அறிவூட்டல், தெரிவித்தல், மகிழ்வித்தல் என்ற வானொலியின் அடிப்படை அம்சங்களோடு ஒலித்துவருகிறது.
இது தமிழ் முரசம் - உங்கள் முரசம்.